தோட்டம் உருவாக்குதல்

மண் கலவை
மண் விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. சாதாரண மண், அதிக எடை கொண்டது. எனவே கோகோ பீட் என்று சொல்லக்கூடிய தேங்காய்நாரில் தயாரிக்கப்படும் ஒரு வகையான மண்ணை கொண்டு செடிகளை பயிர் செய்வதே கட்டிடத்துக்கு பாதுகாப்பானது. இதன் எடையும் குறைவு. தண்ணீரையும் நீண்ட நேரம் தேக்கி வைத்துக் கொள்ளும். இதனுடன், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மண்புழு உரத்தையும், இயற்கையான பூச்சி கொல்லி மருத்துகளையும் பயன்படுத்த வேண்டும்.

      நான்கில் ஒரு பங்கு மண்ணாகவும், ஒரு பங்கு தேங்காய் நார் துகள்களையும்,ஒரு பங்கு மக்கிய உரம், ஒரு பங்கு ஆற்று மணல், 1:1:1:1 என்ற முறையில் பயன்படுத்துவது நல்லது.. 

            Coir Pith block ஐ உடைத்து நீரில் ஒரு இரண்டு நிமிடம் ஊற வைத்தால் உதிர்ந்து விடுகிறது. தேங்காய் நார் தயாரிக்க பொதுவாய் Saline Water ல் ஊற வைக்க படுகிறது. இதனால் இந்த பவுடரில் கொஞ்சம் உப்பு தன்மையும், அதிகமாக Electrical Conductivity யும் இருக்கும். அப்படி இருந்தால் அது செடி வளர ஆகாது. இதை EC Value கொண்டு ‘Low EC block’ ‘High EC block’ என்று குறிப்பிடுகிறார்கள்.  மேலும் இந்த பவுடரை Compress செய்யவும் கொஞ்சம் bonding material பயன்படுவார்கள். இதை எல்லாம் நீக்க நாம் நீரில் இரண்டு அல்லது மூன்று முறை  ஊறவைத்து கொஞ்சம் கழுவி/அலசி எடுத்து கொள்வது நல்லது. அப்போது தான் செடி நன்றாக வரும். 

இந்த பவுடர் வெறும் ஊடகம் அவ்வளவு தான். அதில் செடிக்கு தேவையான எந்த கனிமங்களோ, சத்துகளோ கிடையாது. நீரை பிடித்து கொள்ளவும், செடியின் வேர் எளிதாய் போகவும் ஒரு நல்ல மீடியா. அவ்வளவு தான்.

*       செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைக்காது. அதனால இருக்கிற மண்ணை வளப்படுத்த சில முறைகளை கையாண்டால் போதும் மணல் ஒரு பங்கு சேர்த்து கொள்ளுங்கள்.

*       உங்கள் பகுதியில் எந்த மண் கிடைகுறதோ அத எடுத்துக்குங்க நண்பர்களே. நீங்க எவ்ளோ செடி வைக்கலாம் என்று தோணுதோ அவளோவு.முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கல், குச்சிகளை வெளியே எடுத்து போட்டுவிட்டு வைத்து கொள்ளுங்கள், ஒரு செடிக்கு ஒருவாளிக்கு கால் பங்கு அளவுதான்.அதிலும் அந்த மண்ணுக்கு சமமாக,  மணலும் கலக்கலாம், ஏன் என்றால் வெறும் மண், வேர் பகுதியை இருக்கி  கட்டியாக்கி விடும்.

*       காய்ந்த வேப்பம் இல்லை, நன்கு மக்கிய மாட்டு சாணி உரம், மண்புழு உரம், இவைகளை உயிர் உரம் என்று கூறலாம்.இவை அனைத்தும் மண்ணிற்கு நல்ல உரமாக இருக்கும்.இவையும் தேவை அளவு எடுத்து கொள்ளவும்.

*       மாடி தோட்டத்தில் வேர்களில் எறும்பு வரும். இதற்க்கு  வேப்பம் பிண்ணாக்கை பொடி போன்று செய்தது கொள்ளவும்,அல்லது வேப்பம் எண்ணெய் ஒரு ஒரு ஸ்பூன் அளவு மண்லில் கலந்து செடி வைக்கலாம்.

*       நன்கு கழுவி உலர்த்திய தேங்காய் நார்,மண்,மணல்,மேல சொன்ன உரங்கள்,பூச்சி விரட்டி மருந்துகள் ஆகியவை நன்றாக கலந்து கொண்டு, வாளி யில் தேவைகேற்ப  நிரப்பலாம்.

*       கீரை வகைகளை விளைவிக்க 1/2 அடி ஆழத்திற்கு மேல் மண் கலவை இருந்தால் போதுமானது.

o    செடி வகைகளுக்கு 1 அடி ஆழத்திற்கு மேல் மண் கலவை இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

o    கொடி வகைகளுக்கு 2 அடிக்கு மேலாக இருக்கும்படி பைகளில் மண் கலவையை எடுத்துக்கொள்ளவும்.

*       அதிகபடியான நீர் வெளியேற, அடிப்புறம் சிறுதுளை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்...வேப்பங்காய்கள், கொட்டைகள் கிடைத்தால் அதை தூள் செய்து போடலாம். மிக சிறந்த உரம் இது. பூச்சி கொல்லியும் கூட.

காத்திருப்பு
*       செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
*       தென்னைநார்க் கலவைகள் நன்கு மக்குவதற்காக, பைகளை ஏழு முதல் எட்டு நாட்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு தென்னைநார்க் கழிவு கருப்பு நிறமாக மாறிவிடும். அப்போதுதான் பைகள், விதைப்பதற்கு ஏற்றதாக மாறும்.
*       இந்த ஒரு வார காலத்தில் நீங்கள் தோட்டத்தை சீர் படுத்தி,உரம் போன்றவற்றை நீங்களே தயாரித்து வைத்து கொள்ளலாம்.

விதைப்பு முறை
நேரடி விதைப்புமுறை: வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.

கீரை வகைகளின் விதைகள் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தேக்கரண்டி விதையுடன் இரண்டு பங்கு மணல் அல்லது நுண்ணுயிர் உரத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு அதைச் செய்தித்தாளால் மூடிவிட வேண்டும். அதன் மேல் பூவாளியைக் கொண்டு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் நன்கு முளைத்த பிறகு தாளை எடுத்துவிட வேண்டும்.

நாற்றுவிட்டு நடவு செய்யும் முறை:நாற்றுவிட்டு நடவு செய்து பயிரிடும் காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றைக் குழித்தட்டில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். நாற்றின் வயது 30-35 நாட்கள் ஆன பிறகு செடிகளை வளர்ப்பதற்கான பையில் நடவேண்டும். அதுவரை பையில் கீரை விதைகளை விதைத்துப் பயன் பெறலாம்.

குழித்தட்டு
*       கத்தரி, தக்காளி, பச்சைமிளகாய் விதைகள் சிறிதாக இருப்பதால் அவற்றை குழித்தட்டு டிரேயில் வளர்க்க வேண்டும்.

*       குழிகளில் தேங்காய்நார் துகள்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி லேசாக விரலால் அழுத்திய இடத்தில் விதைகளை துாவி மேலாக தேங்காய் நார் துகள்களால் மூட வேண்டும். இப்படி 30 நாட்கள் டிரேயில் நாற்றுகளாக வளர்த்து, பெரிய பைகளுக்கு மாற்ற வேண்டும்.

*       மற்ற விதைகளை மண் பைகளில் நேரடியாக துாவி செடியாக வளர்க்கலாம்

*       பின் உங்களுக்குத் தேவையான காய்கறி விதைகளை சேகரித்தோ அல்லது கடைகளில் வாங்கியோ பைகளில் ஊன்றி வைத்தால் போதும்! இயற்கை தன் விளையாட்டை ஆரம்பித்துவிடும்! அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உங்கள் வீடுகளில், உங்கள் மாடித் தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த கீரை குழம்பாகவும், வெண்டைக்காய்கள் கூட்டாகவும், தக்காளிகள் பச்சடியாகவும் மணமணக்கும்.

செடிகளை வளர்க்கும் காலம்
காய்கறிச் செடிகளை எல்லாக் காலங்களிலும் பயிர் செய்யலாம். ஆனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு மாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

இன்னொரு விஷயம். மாடியில் அல்லது பால்கனியில் தோட்டம் அமைக்க நினைத்தால், எல்லா காய்களையும் ஒரேடியாக போட்டு பயிர் செய்ய வேண்டாம். முதலில் கீரை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சின்ன தொட்டியில் வைத்து பயிர் செய்யலாம். இவை எல்லா காலத்திலும் விளையும். அடுத்து வெண்டைக்காய். பிறகு தக்காளி, கத்தரிக்காய் என ஒன்வொன்றாக பயிர் செய்வதே நல்லது. உங்களால் முடியும் என்றால் அணைத்து காய்கறிகளையும் பயிர்யிட இறங்கலாம்.

இதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?
புதிதாக தொடங்க ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் தேவை படலாம். செடிகள் நட்டு வளர ஆரம்பிக்க ஒரு மாதம் பிடிக்கும.நீங்களே வளர்த்த தாவரங்கள் என்பதால், அதனால் உண்டாகும் பலன்கள் உங்களுக்கு பரமதிருப்தியைத் தருகிறது.

உற்சாகமாக ஈடுபடுங்கள்...
சந்தோசமான  வீட்டுத் தோட்டத்துக்கு என் வாழ்த்துக்கள்...


மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்....

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.